Monday, November 22, 2010

பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும்

“பிரபஞ்சமும் B. எழுத்தாளர்களும்” என்ற தலைப்பில் 10-15 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு கதை எழுதுவதாக ஒரு திட்டம் உள்ளது.

சில முன்குறிப்புகள்:

1. இக் கதையில் வரும் நபர்கள், அவர்களுடைய, சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே என்று நம்பும் உரிமை உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

2. இக் கதை பின் நவீனத்துவ முறையைப் பின்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. பின் நவீனத்துவ முறை எவையெல்லாம் அல்ல அன்று தெளிவாக விளக்கப்பட்டது போல, பின் நவீனத்துவ முறை எது என்பது இன்னமும் விளக்கப்படாமலே உள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமானால், பல பேர் விளக்கியும் விளக்கியவர்கள் உட்பட எவராலும் புரிந்து கொள்ளப் படாமல் உள்ளது. பிரபல எழுத்தாளர் ஒருவர் பிரபல வார இதழ் ஒன்றில் பின் நவீனத்துவத்தைப் புரிந்து கொள்ள வைக்காமல் கூந்தலை அள்ளி முடியேன் என்று சபதமெடுத்துள்ளார். இது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு சபதம். ஏனென்றால் எழுத்தாளர் கடவுளைக் கண்டவர். இந்த முன்னுரை எழுதப்படும் காலத்தில் சபதம் நிறைவேறவில்லையென்றாலும், இது வாசிக்கப்படும் காலகட்டத்தில் ஏதாவது ஒன்றில் அது நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அப்படி ஆகியிருந்தால் நீங்கள் பாக்கியசாலிகள். கோனார் தமிழ் உரை கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பின் தமிழ் பயின்ற மாணவர்கள் போல.

3. இந்த முன்குறிப்புகளின் பட்டியல் நீட்டிக்கப்படுமேயொழிய தவிர எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது. அவ்வப்போது இந்த முன்குறிப்புகள் மாற்றம் பெற்றிருக்கின்றனவா என்று படித்துத் தெரிந்து கொள்வது வாசகர்களாகிய உங்களுடைய கடமையாகும் தவிர, அவற்றை அறிவிப்பது B. எழுத்தாளனின் கடமையோ, இந்த ப்ளாக் உரிமையாளர் AVS கடமையோ ஆகாது.


1 comment:

Anton Prakash said...

மிரிண்டா உரிமைகள் போல அர்த்தம் தொனிக்கிறதே ?