Friday, July 27, 2007

இரண்டாவது தபால்: ஒரு முன்னுரை

எனது இரண்டாவது ஞாயிறு தபால் வெள்ளியன்றே வருகிறது. காரணம் வரும் ஞாயிறு முழுவதற்கும் பல பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

எனது வலைப் பதிவுகளை தொடங்கு முன்னர், மற்றவர்களது வலைப் பதிவுகளை அத்தனை கவனமாக வாசித்ததில்லை. குறிப்பாக தமிழில். எனவே, இந்த வாரம் மற்றவர்களது வலைப் பதிவுகளை வாசிக்க தொடங்கினேன். http://ilavanji.blogspot.com தான் நான் தொடங்கிய இடம். முற்றுப் பெற்றதும் அங்கேதான். அவ்வளவு சுவையான பதிவுகள் அங்கே உள்ளன. ‘தனித்துவமானவன், உங்களைப் போலவே” என்று வெளிப்புறத்தில் சுய கேலியாக, ஆனால் சற்று யோசித்தால் யதார்த்தமான தன் விளக்கம், இளவஞ்சியின் படைப்புக்கள் அத்தனையிலும் பிரதிபலிக்கிறது.

நான் தபாலை அறிமுகப்படுத்தி அனுப்பிய மின்மடலுக்கு பதிலாக இளவஞ்சி:
“தமிழ்ப்பதிவுலகம் எனும் குளத்தில் தொபுக்கடீரென குதித்ததற்கும், வரும் காலங்களில் மூழ்கி பல முத்துக்கள் எடுக்கவும் வாழ்த்துக்கள்!

மூன்று பதிவுகள் ஆன பிறகு தமிழ்மணத்தில் இணைத்துவிடுங்கள். பல படிப்பாளர்களை சென்றடைய இது உதவும். சுட்டி http://www.thamizmanam.com/user_blog_submission.php
என்று சொல்லியிருந்தார்.

எனவே, இந்த வார தபால்களை பதிந்து விட்டு தமிழ்மணத்தில் இத் தளத்தை இணைப்பதாக திட்டம்.

இந்த வார தபாலில் ஒரு மாற்றம். கடந்த முறை பல விஷயங்களை ஒரே பதிவாக செய்தது போலல்லாமல் ஒவ்வொன்றையும் தனித் தனியாக செய்கிறேன். ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக தலைப்பு கொடுப்பது, பின்னர் உள்ளடக்கம் தயாரிப்பது எளிதாக இருக்கும் என்ற காரணத்தினால்தான் இந்த மாற்றம்.

1 comment:

ilavanji said...

நண்பரே,

என் பதிவுகளைப்பற்றிய உங்கள் உயர்வான எண்ணங்களுக்கு என் நன்றிகள்!

தபாலை தெனமும் போடப்படாதா?! :)