Friday, February 4, 2011

விவஸ்தை இல்லாத இந்துவும் ராசா கைதும்

பிப்ரவரி 3 2011 தலையங்கத்தில் "Significance of Raja's arrest" என்ற தலைப்பின் கீழ் தி இந்து பத்திரிகை ராசாவைக் கைது செய்ததது மட்டும் போதாது பிரதமரையும், சோனியாவையும் கூட விசாரிக்க வேண்டும் என்ற ரீதியில் எழுதியிருக்கிறது. நியாயமான விஷயம்தான். ஆனால் யார் இதை எழுதுவது என்ற விவஸ்தை வேண்டாமா? ராசா விவகாரம் புகைந்து கொண்டிருந்த சமயத்தில், அதை பூசிப் மெழுக முயன்றது இந்த இந்துதான். எனவே தலையங்கத்திற்கு பின்னூட்டமாக கீழ்க்கண்டதை எழுதினேன். எதிர் பார்த்தவாறே அவர்கள் அதை பிரசுரிக்கவில்லை. அதனால் என்ன? நம் தபாலில் பிரசுரித்து விடுவோம். நாலு பேருக்கு தெரிய வேண்டும் அல்லவா? (I mean literally four people)

The editorial is eloquent and full of righteousness, but it needs to be contrasted with the interview you published on May 22, 2010 (http://www.thehindu.com/opinion/interview/article435348.ece). That interview was nothing but an opportunity provided to the corrupt minister on a golden platter to portray and promote himself as a pure saint. No hard questions asked, no claims challenged. The interview became the material for DK's Veeramani to absolve Raja from all allegations. Now that the ex-minister stands exposed, The Hindu tries to wear the mask of a holy saint. Shame on you. Most likely you won't publish this comment, but I hope you have a conscience and will try to regain your journalistic ethics.

7 comments:

Unknown said...

நன்று! மிக நல்ல கண்டிப்பு! ஒரு பச்சையான அரசியல் அயோக்கியத்தனத்தை ஜாதி அரசியால் பூசி மெழுகுவதை எவரும் எக்கணத்திலும் அனுமதிக்கக் கூடாது!

Unknown said...

நன்று! மிகச் சரியான, தேவையான கண்டிப்பு!

Anonymous said...

Sreedharan from Sharjah Said,

Your command over English is excellent!
No better words could mock at The Hindu

Well Done and well said

Thanks

ரிஷபன்Meena said...

நம்ம பத்திரிகைகள் விவஸ்தை கெட்டு வியாபரமே குறியாக இருப்பது நமக்கு பழகிப் போய்விட்டது.

தமிழ் பத்திரிகைகளைப் பற்றி நான் கூட ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்.


ரிஷபன்Meena: ஷாருக்கான் -இன்கம்டாக்ஸ்-கங்குலி

Victor Suresh said...

From one இளங்கிழவன் to another இளங்கிழவன்: நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்து பத்திரிக்கை மெழுகப் பார்த்தது சாதி அரசியலால் இல்லை. ஒரு வேளை திமுக மேலுள்ள அபிமானத்தாலும் அதிமுக மேலுள்ள அபிமானத்தாலும் இருக்கலாம் (அம்மையார் ராமைப் பிடித்து உள்ளே தள்ள வேண்டும் என்று ஒரு காலத்தில் திட்டமிட்டாரே, நினைவிருக்கிறதா?). அதற்கும் மேலே கணக்குகள் இருக்கலாம். ராடியா டேப் விவகாரத்திற்குப் பிறகு சகல புனித பிம்பங்களும் ஆதவன் பார்த்த பனி போல காணாமல் போய் விட்டனவே.

ஆனால் திராவிட கட்சியின் கொள்கைகள், நடவடிக்கைகளுக்கு எதிராக இந்து ஏதாவது சொன்னால் இந்துவின் சாதிப் பின்புலத்தைச் சொல்லித் திட்டும் வீரமணி, இந்து ஏதாவது சார்பாகச் சொல்லி விட்டால் போட்டும் அதையே வேதவாக்காகக் கொண்டாடுவார். அதுதான் இந்த சம்பவத்திலும் நடந்தது.

Victor Suresh said...

Dear Mr Sreedharan, Thank you for your comments. I appreciate all of them.

Victor Suresh said...

ரிஷபன், உங்கள் பதிவைப் படித்தேன். செம கிண்டல் செய்திருக்கிறீர்கள்.

வியாபாரம் இல்லாமல் பத்திரிகைகள் ஓட முடியாது. ஆனால், நம்பகத்தன்மை எல்லா வியாபாரங்களிலும் உள்ள பண்டங்கள்/சேவைகள் போல் பத்திரிகைகளுக்கும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காலப்போக்கில் வியாபாரம் படுத்து விடும். எனவே, வியாபார நோக்கிலாவது பத்திரிக்கைகள் நேர்மையாக நடத்தப்படட்டும்.